சிதம்பரத்திற்கு திடீர் வயிற்றுவலி! மருத்துவமனையில் அனுமதி!! 

 

சிதம்பரத்திற்கு திடீர் வயிற்றுவலி! மருத்துவமனையில் அனுமதி!! 

திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் வயிற்று வலி உள்ளதாக கூறியதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட்  மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர். சிபிஐ காவலில் வைத்து சிதம்பரத்தை விசாரணை செய்து வந்தது. பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்  ஆஜர்படுத்தப்பட்டார். ஆஜரான அவருக்கு சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 19 -ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது.

PC

இதனை தொடர்ந்து மீண்டும் சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் .ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது  சிபிஐ நீதிமன்றம். சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் வயிற்று வலி உள்ளதாக கூறியதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்