சிட்டி ரீலோடட் வெர்ஷன் ‘3.0’ உறுதி: வீடியோ வெளியிட்ட அக்ஷய்குமார்!

 

சிட்டி ரீலோடட் வெர்ஷன் ‘3.0’ உறுதி: வீடியோ வெளியிட்ட அக்ஷய்குமார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் அடுத்த பாகமான ‘3.0’ உருவாவதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் அடுத்த பாகமான ‘3.0’ உருவாவதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த நவ.29ம் தேதி ரிலீசானது. ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் இப்படம் உருவானது. ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக பொருட்செலவில் உருவான இப்படத்தின் முதல் நாள் வசூல் படக்குழுவுக்கு திருப்திகரமாக இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதை உறுதிப்படுத்து விதமாக நடிகர் அக்ஷய்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘2.0’ சிட்டியை, ’பேர்ட் மேன்’ பக்ஷிராஜனாகிய அக்ஷய்குமார் காலால் மிதித்துக் கொள்ள வரும்போது, வெள்ளை புறாவில் வரும் ரோபோ, நான் தான் சிட்டி வெர்ஷன் 3.0 என கூறுகிறது. ஆகவே இதன் மூலம் அடுத்த பாகம் இருப்பது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே இப்படத்தின் மூன்றாம் பாகத்தை ‘3.0’ என்ற பெயரில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், சிட்டியாக ரஜினி சார் நடித்தால் மட்டுமே 3.0 சாத்தியமாகும் என்றும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எந்திரன் படத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. அடுத்து 3ம் பாகம் என்றால் எத்தனை ஆண்டுகளாகும் என்பதை காட்டிலும் அதற்கு எத்தனை செலவாகும்? யாரு அதை தயாரிப்பார்கள்? என்பன போன்ற பல யோசனைகள் நெட்டிசன்களுக்கு தோன்றிவிட்டது.