சிடுசிடுவென இல்லாமல் முதல்வர் சிரித்த முகத்தோடு இருக்கிறார்: எடப்பாடி குறித்து சரோஜா தேவி பேச்சு!

 

சிடுசிடுவென இல்லாமல் முதல்வர் சிரித்த முகத்தோடு இருக்கிறார்: எடப்பாடி குறித்து சரோஜா தேவி பேச்சு!

மற்ற முதல்வர்கள் போல் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி  சிரித்த முகத்தோடு இருக்கிறார் என்று பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தெரிவித்துள்ளார்.

சென்னை: மற்ற முதல்வர்கள் போல் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி சிரித்த முகத்தோடு இருக்கிறார் என்று பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தெரிவித்துள்ளார்.

மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை கொண்ட பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற ‘சென்னையில் திருவையாறு’ தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய சரோஜாதேவி, ‘நான் இதுவரை பார்த்த முதல்வர்களில் முகத்தில் எப்போதும் புன்சிரிப்போடு இருப்பவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. மற்றவர்கள் சிடு சிடுவென இருப்பார்கள். தமிழகத்திற்கு என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும். மேலும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்’ என்று  கூறியது குறிப்பிடத்தக்கது.