சிங்கத்திடம் தகராறு செய்த போதை ஆசாமி! பதிலுக்கு சிங்கம் அளித்த பரிசு…

 

சிங்கத்திடம் தகராறு செய்த போதை ஆசாமி! பதிலுக்கு சிங்கம் அளித்த பரிசு…

டெல்லி உயிரியல் பூங்காவில் மதுபோதையில் சிங்கத்திடம் ஒருவர் வம்பிழுத்த வீடியோ வெளியாகியுள்ளது. 

டெல்லி உயிரியல் பூங்காவில் மதுபோதையில் சிங்கத்திடம் ஒருவர் வம்பிழுத்த வீடியோ வெளியாகியுள்ளது. 

 

டெல்லி உயிரியல் பூங்காவிலுள்ள விலங்குகளை வழக்கம்போல மக்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிங்கங்கள் நடமாடும் பகுதியில், பிரம்மாண்ட சுவர் மற்றும் இரும்பு வேலிகளை தாண்டி இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தார். சுற்றியிருப்பவர்கள் அதைப் பார்த்து அச்சத்தில் அலற, அது குறித்தெல்லாம் கவலைப்படாத அந்த இளைஞர் நேராக சிங்கத்தின் அருகில் சென்றார். சிங்கத்தின் முகத்தை நேருக்கு நேர் பார்த்த அந்த இளைஞரை, அந்த சிங்கமும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தது. 

அதன்பின் சிங்கத்தின் முகத்தை தடவிக் ‌கொடுத்து, அதனிடம் ஏதோ பேசி கொண்டிருந்த இளைஞரின் செயல் காண்போரை அச்சத்தில் ஆழ்த்தியது. சில நொடிகள் அமைதியாக இருந்த சிங்கம், பின் அந்த இளைஞரை தாக்க முயன்றது. இதனைபார்த்த உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் சிங்கத்திற்கு மயக்க ஊசி செலுத்தி அந்த இளைஞரை காப்பாற்றினர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், பீகாரைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் ரேஹன் கான் என்பதும் அவர், மதுபோதையில் இவ்வாறு செய்ததும் தெரியவந்தது.