சிக்கலில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்: அமலாக்கத்துறை சம்மன்!

 

சிக்கலில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டியின்  கணவர்:  அமலாக்கத்துறை சம்மன்!

இக்பால் மிர்சியுடன்தொழில்ரீதியான நட்பு வைத்திருந்ததாகப் புகார் எழுந்தது. 

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பாஜிகர்  திரைப்படத்தில் அறிமுகமாகி பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் நடித்து கொடிக்கட்டிபறப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது  கணவர் ராஜ்குந்த்ரா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான, இக்பால் மிர்சியுடன் தொழில்ரீதியான நட்பு வைத்திருந்ததாகப் புகார் எழுந்தது. 

shilpa

ஏற்கனவே இந்த விவகாரத்தில் சிக்கி  அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள்   RKW முன்னாள் இயக்குநர் ரஞ்சித் பிந்த்ரா மற்றும் மற்றொரு இயக்குநரான பாபா தேவன். இவர்கள் இருவரும்  ஷில்பா ஷெட்டி  இயக்குநராக இருந்த எசென்ஷியல் ஹாஸ்பிட்டாலிட்டி  என்ற நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பது விசாரணையில்  அம்பலமாகியுள்ளது. 

shilpa

இந்நிலையில் ஷில்பா ஷெட்டி கணவர்  ராஜ்குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக  வரும்  4-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மனில்  குறிப்பிடப்பட்டுள்ளது.