சிக்கன் சாப்பிட்டதால் மூச்சுத்திணறல்?.. இளைஞர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!

 

சிக்கன் சாப்பிட்டதால் மூச்சுத்திணறல்?.. இளைஞர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!

அவருக்கு கடுமையான வயிற்றுப் போக்கு மற்றும் மூச்சுத்திணறல் இருந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் 20 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தவர் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான வயிற்றுப் போக்கு மற்றும் மூச்சுத்திணறல் இருந்துள்ளது. அதனையடுத்து மருத்துவர்கள், அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

ttn

அந்த இளைஞர் மருத்துவமனைக்கு வருவதற்கு சிறிது நேரம் முன்னர், நண்பர்களுடன் சிக்கன் எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார். அதற்கு பிறகு தான் அவருக்கு மூச்சுத்திணறலும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. அவர் சிக்கன் சாப்பிட்டதால் தான் உயிரிழந்தாரா அல்லது அவரது உடலில் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்ததா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட 45 நிமிடங்களில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தால் தான், எப்படி அவர் உயிரிழந்தார் என்பது தெரிய வரும்.