சிக்கன் கிரேவியில் கரப்பான் பூச்சி…தட்டிக்கேட்டவரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர்!?

 

சிக்கன் கிரேவியில் கரப்பான் பூச்சி…தட்டிக்கேட்டவரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர்!?

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது  அதில்  கரப்பான் பூச்சி இருந்ததாகக் கூறப்படுகிறது. 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஸ்டாலின். இவர் தனது நண்பர்களுடன் சமயபுரம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றுள்ளார். அங்கு பரோட்டா மற்றும் சிக்கன் கிரேவியை ஆர்டர் செய்த அவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது  அதில்  கரப்பான் பூச்சி இருந்ததாகக் கூறப்படுகிறது. 

rttn

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளரிடம் சொன்னபோது அங்கிருந்த கடை ஊழியர்கள், உரிமையாளர் என அனைவரும் சேர்ந்து ஸ்டாலினை அடித்ததாகவும், அதிகமாக பில் போட்டு அதை செலுத்துமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 

ttn

இந்நிலையில் வழக்கறிஞர் ஸ்டாலின் இதுகுறித்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ராவிடம் புகார் கொடுத்ததுடன், வணிக வரித்துறை அதிகாரியிடமும் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.