சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் அருண் ஜெட்லி; மகிழ்ச்சி என ட்விட்டரில் பதிவு

 

சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் அருண் ஜெட்லி; மகிழ்ச்சி என ட்விட்டரில் பதிவு

நாடு திரும்பியது மகிழ்ச்சி என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

புதுதில்லி: நாடு திரும்பியது மகிழ்ச்சி என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் சிறுநீரகங்கள் பழுதடைந்ததால், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனயில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு செய்யப்பட்டது. அவரது உடன் நிலை சீரான நிலையில், கடந்த மாதம் 15-ம் தேதி மருத்துவ மேல் சிகிச்சைக்காக அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றார்.

அப்போது, மத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். பட்ஜெட்டுக்கு அமெரிக்காவில் இருந்து அருண் ஜெட்லி பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து அருண் ஜெட்லி விமானம் மூலம் இன்று தில்லி திரும்பினார். இது தொடர்பான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, விரைவில் அவர் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்பார் என தெரிகிறது.