சிகிச்சைக்கு அடம்பிடித்த குழந்தை!! நோயாளியாக மாறிய பொம்மை…

 

சிகிச்சைக்கு அடம்பிடித்த குழந்தை!! நோயாளியாக மாறிய பொம்மை…

டெல்லியில் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடித்த, 11 மாத பெண் குழந்தையை, அதன்போக்கிலே சென்று சமாதானப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடித்த, 11 மாத பெண் குழந்தையை, அதன்போக்கிலே சென்று சமாதானப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜிக்ரா மாலிக் என்ற 11 மாத குழந்தை வீட்டில் உள்ள மெத்தையில் இருந்து கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் டெல்லியிலுள்ள லோக்நாயக் மருத்துமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். குழந்தையின் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதால் அந்த குழந்தையின் கால் கட்டுப்போட்டு ஓரிடத்தில் தூக்கி நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து அடம்பிடித்தது.

Baby

என்னசெய்வதென்று குழம்பிபோன மருத்துவர்கள், அதனுடைய பொம்மை ஒன்றுக்கு இதேபோல் காலில் கட்டுப்போட்டு கால் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும்படி செட்டப் செய்தனர். இதைப்பார்த்த அந்த குழந்தை ஜிக்ராவும், பொம்மை படுத்திருப்பதை பார்த்து தமக்கும் சிகிச்சை அளிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.