சிகிச்சைக்காக விஜயகாந்த் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்படுவார்: பிரேமலதா விஜயகாந்த்

 

சிகிச்சைக்காக விஜயகாந்த் வெளிநாட்டுக்கு  அழைத்து செல்லப்படுவார்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்படுவார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்படுவார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதி தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் முன்பு போல் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சிகிச்சைக்காக அவர் அவ்வப்போது வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படுகிறார். சமீபத்தில் கூட அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தார். விஜயகாந்த் விரைவில் முழு குணமாகி முன்பு போல் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என தேமுதிக தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களை சத்தித்த அவர், மேல் சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை வெகு விரைவில் வெளிநாடு அழைத்து செல்ல இருக்கிறோம். அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.  சிகிச்சைக்கு பின் விஜயகாந்த் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்றார்.