சிகரெட் பாக்கெட்டில் குரூரமான படத்தை வெளியிட உத்தரவு! – ராமதாஸ் வரவேற்பு
சிகரெட் பாக்கெட்களில் முன்பு இருந்ததைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் மிகக் குரூரமான படத்தை வெளியிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சிகரெட் பாக்கெட்களில் முன்பு இருந்ததைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் மிகக் குரூரமான படத்தை வெளியிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மத்திய அரசின் அறிவிக்கையுடன் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிக்கையில், “சிகரெட் பாக்கெட்களில் முன்பு இருந்ததைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் புகையிலை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளியின் படத்தை அச்சிட வேண்டும், அதனுடன் புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்தும் என்ற வாசகத்தை அச்சிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
டாக்டர் ராமதாஸ் பதிவில், “நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி, புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது ‘புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்தும்’ என்ற வாசகமும், வழக்கத்தை விட குரூரமான எச்சரிக்கைப் படத்தையும் வரும் செப்டம்பர் முதல் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி,
புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது ‘புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்தும்’ என்ற வாசகமும், வழக்கத்தை விட குரூரமான எச்சரிக்கைப் படத்தையும் வரும் செப்டம்பர் முதல் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.#TobaccoKills pic.twitter.com/XaFY3T9JpB— Dr S RAMADOSS (@drramadoss) April 15, 2020