சிகரெட்டைத் தூக்கிப் போட்டு புடிச்சவங்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்! அமைச்சர்  ஆவேசம்!

 

சிகரெட்டைத் தூக்கிப் போட்டு புடிச்சவங்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்! அமைச்சர்  ஆவேசம்!

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதத்தில் நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த விழாவில் ரஜினி பேசியதற்கு தொடர்ந்து அரசியல் தலைவர்களிடையே எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதத்தில் நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த விழாவில் ரஜினி பேசியதற்கு தொடர்ந்து அரசியல் தலைவர்களிடையே எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

kamal and rajini

எடப்பாடி எல்லாம் 2,3 ஆண்டுகளுக்கு முன்னால் முதல்வர் ஆவோம் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் என்று ரஜினி பேசியதற்கு அதிமுக தலைவர்கள் தொடர்ந்து எதிர் கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.

o.s.mani

இன்று மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்றும், சிகரெட்டைத் தூக்கிப் போட்டு பிடித்தவர்களை எல்லாம் மக்கள் ஒரு போதும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் ரஜினி குறித்து பேசினார்.