சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும்… நம்பிக்கை தெரிவித்த திருமா!

 

சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும்… நம்பிக்கை தெரிவித்த திருமா!

திருச்சி வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லியில் நடந்த வன்முறை உலக அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் எப்படி திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டதோ, அதேபோல் டெல்லியிலும் நடத்தியுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
திருச்சி வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லியில் நடந்த வன்முறை உலக அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் எப்படி திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டதோ, அதேபோல் டெல்லியிலும் நடத்தியுள்ளனர்.

delhi riot

இதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். டெல்லி வன்முறையை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 

tamilaruvi-manian

தமிழக சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு அ.தி.மு.க உடன்படக் கூடாது” என்றார். தமிழருவி மணியனின் சமீபத்திய பேச்சு பற்றி திருமாவளவனிடம் கேட்டபோது, “தமிழருவி மணியன் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் இல்லை. அவர் தன்னுடைய தனிப்பட்ட கருத்தைக் கூறுகிறார்” என்றார்.