சிஏஏ: நம்பிக்கை கொடுங்கள்… நல்லது நடக்கும்! – வைரமுத்து கவிதை

 

சிஏஏ: நம்பிக்கை கொடுங்கள்… நல்லது நடக்கும்! – வைரமுத்து கவிதை

தூண்டப்பட்ட வன்முறைக்கு எதிராக நாடு முழுவதும் இருந்து கண்டன குரல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை கொடுங்கள், நல்லது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடந்த மோதலில் 34-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தூண்டப்பட்ட வன்முறைக்கு எதிராக நாடு முழுவதும் இருந்து கண்டன குரல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை கொடுங்கள், நல்லது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த கவிதை:
“எதிராக வாக்களித்தவர்க்கும் 
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்;
நன்மை விளையும்.
#CAA”

 

;