சிஏஏ தொடர்பாக இஸ்லாமிய மத குருமார்களை சந்தித்து பேச ரஜினி முடிவு!

 

சிஏஏ தொடர்பாக இஸ்லாமிய மத குருமார்களை சந்தித்து பேச ரஜினி முடிவு!

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜகவுக்கு ஆதரவாக இருந்த தலைவா்கள் சிலரும், இப்போது சிஏஏ-வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜகவுக்கு ஆதரவாக இருந்த தலைவா்கள் சிலரும், இப்போது சிஏஏ-வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருவதோடு, இஸ்லாமியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. இதேபோல் சிஏஏவுக்கு ஆதரவாகவும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த், “ இந்தியாவில் வாழும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவா்களுடைய குடியுரிமை பறிக்கப்படப் போவதும் இல்லை.

rajinikanth

மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வருபவா்களுக்கு குடியுரிமை அளிப்பதா அல்லது வேண்டாமா என்பதைத் தீா்மானிக்கத்தான் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இஸ்லாமியா்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. சில அரசியல் கட்சிகள் சுய லாபத்துக்காகவும், சுயநலனுக்காகவும் இஸ்லாமியா்களைத் தூண்டி விடுகின்றனா். இதற்கு இஸ்லாமிய மத குருக்கள் சிலரும் துணைபோகின்றனா்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இஸ்லாமிய மத குருமார்களுடன் தொலைபேசியில் உரையாடிய ரஜினி, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விரைவில் உங்களை சந்திக்கிறேன், எத்தனை பேர் வருவீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.