சிஏஏ திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சியில் தேசம் காப்போம் பேரணி! 

 

சிஏஏ திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சியில் தேசம் காப்போம் பேரணி! 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், என்.பி.ஆர் உள்ளிட்டவற்றைக் கொண்டுவரக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி நடத்தப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி நடத்தப்பட்டது. இதில் தொல் திருமாவளவன் பங்கேற்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், என்.பி.ஆர் உள்ளிட்டவற்றைக் கொண்டுவரக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி நடத்தப்பட்டது.

save-nation

திருச்சி எம்.ஜி.ஆர் சிலையில் தொடங்கி உழவர் சந்தை வரை இந்த பேரணி நடந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார்.
பின்னர் நடந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், இந்தியக் குடியுரிமைப் பதிவேடு உள்ளிட்டவற்றைத் திரும்பப் பெற வேண்டும், மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.