சிஏஏவுக்கு எதிராக நேற்று முதல் சென்னையில் பல இடங்களில் தொடரும் போராட்டம்!

 

சிஏஏவுக்கு எதிராக நேற்று முதல் சென்னையில் பல இடங்களில் தொடரும் போராட்டம்!

நீண்ட நேரமாக அவர்கள்  போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை கலைந்து  செல்லுமாறு கூறியதாக தெரிகிறது

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக அவர்கள்  போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை கலைந்து  செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.  இதனால் போலீசார் , மற்றும் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடந்தது. இதில் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதை கண்டித்து பெண்கள் உள்பட பலரும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

ttn

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த  சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தையில் கைதானவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டது.  எனினும், காவல்துறையினரின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தொடர்ந்து இஸ்லாமியர்கள் நள்ளிரவைத் தாண்டியும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ttn

இந்நிலையில் இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் பிராட்வே, திருவல்லிக்கேணி, பாரிமுனை, கிண்டி, ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட  இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.