சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி: தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!
பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பெங்களூரில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய விராட் கோலி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஆடிய பர்த்திவ் படேல், டி வில்லியர்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது.
162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. வாட்சன், டூ ப்ளிஸிஸ், சுரேஷ் ரெய்னா , அம்பதி ராயுடு என அடுத்தடுத்து பெவிலியன் திருப்பினர். ஆனால் சூழலை புரிந்து கொண்ட தோனி, அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். இறுதியில்,சென்னை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் தோனி முதல் 5 பந்துகளில் மூன்று சிக்ஸர், ஒரு ஃபோர் உள்பட 24 ரன்கள் எடுத்தார். இருப்பினும் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஷர்துல் ரன் அவுட்டானார். இதனால் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Emotions galore ❤️#VIVOIPL pic.twitter.com/oGbML4OHwJ
— IndianPremierLeague (@IPL) April 21, 2019
சென்னை அணியில் அதிகபட்சமாக தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். சென்னை அணி தோல்வி அடைந்ததாலும், இறுதிவரை களத்தில் நின்று ஆடிய தோனிக்கு அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதை வாசிக்க: அவர் இல்லாததை ஏற்று கொள்ளவே முடியவில்லை; கம்பீர் காட்டம் !!