சாவு நடந்தாலும் விடமாட்டோம்… இடைத்தேர்தலில் கெத்து காட்டத்துடிக்கும் அதிமுக..!

 

சாவு நடந்தாலும் விடமாட்டோம்… இடைத்தேர்தலில் கெத்து காட்டத்துடிக்கும் அதிமுக..!

துக்கம் நடந்து மூன்றே நாட்களில் சோகத்தை வெளிக்காட்டாமல், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அவர் பிரசாரத்தில் இறங்கி விட்டார்.

வீட்டில் துக்கம் நடந்து மூன்று நாட்களிலேயே அமைச்சர். சி.வி.சண்முகம் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி ஏற்கனவே தி.மு.க., வசம் இருந்ததால், இடைத்தேர்தலிலும்  வெற்றி பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில், அக்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியாக இருந்தும், விக்கிரவாண்டியில் தோற்றுப்போனால் அவமானன் என நினைத்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், அ.தி.மு.க.,வினரும், பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த  6ம் தேதி, அமைச்சருடைய வீட்டிலேயே, அவருடைய சகோதரி மகன் துாக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதனால் அமைச்சர், இடிந்து போய்விட்டார். இதனால், அமைச்சர் சி.வி.சண்முகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்ட மாட்டார் என கட்சியினர் நினைத்திருந்தார்கள். ஆனால், துக்கம் நடந்து மூன்றே நாட்களில் சோகத்தை வெளிக்காட்டாமல், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அவர் பிரசாரத்தில் இறங்கி விட்டார்.