சாலை விபத்தில் சிக்கிய பெண் உதவி ஆய்வாளர் மரணம்: போலீசார் விசாரணை

 

சாலை விபத்தில் சிக்கிய பெண் உதவி ஆய்வாளர் மரணம்: போலீசார் விசாரணை

படப்பை அருகே நேர்ந்த சாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: படப்பை அருகே நேர்ந்த சாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிண்டி சரக பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர், மாங்குயில். இவர் இதற்கு முன் சென்னை வளசரவாக்கம் சட்டம் ஒழங்கு பிரிவில் பணி புரிந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், சென்னையை அடுத்த படப்பை அருகே மாங்குயில் சென்று கொண்டிருந்த போது நேர்ந்த சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாங்குயில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.