சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து.. 5 பேர் உயிரிழப்பு !

 

சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து.. 5 பேர் உயிரிழப்பு !

குடும்பத்தோடு  மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர், பொதுப்பணித்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் அவரது குடும்பத்தோடு  மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  உள்ள ரெட்டிப்புதூர் என்னும் பகுதியில் இவர் சென்று கொண்டிருக்கும் போது, முன்னால். ஒரு வாகனம் காரை முந்திக் கொண்டு சென்றுள்ளது. அதனால், இவரும் சாலையில் இடது புறத்தில் இருந்த அந்த வாகனத்தை அதிவேகமாகக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. 

ttn

அப்போது, இடது புற சாலையில் விதிகளை மீறி லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.கார் வேகமாகச் சென்றதில், நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவகுமார், அவரது மனைவி, குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .