சாலையில் தறிகெட்டு ஓடிய கார்…நடைபாதையில் ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி !

 

சாலையில் தறிகெட்டு ஓடிய கார்…நடைபாதையில் ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி !

வேகமாகச் சென்ற அந்த கார் சாலையின்  நடைபாதை மீது ஏறி, அதில் அமர்ந்திருந்த மூதாட்டி மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மதுரை நாகமலை புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி திருநாவுக்கரசு. இவர், நேற்று கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை ரோட்டில் தனது காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு காரை நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது, கார் சாலையில் தறிகெட்டு ஓடி பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோ மீது மோதியுள்ளது. 

ttn

வேகமாகச் சென்ற அந்த கார் சாலையின்  நடைபாதை மீது ஏறி, அதில் அமர்ந்திருந்த மூதாட்டி மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த மூதாட்டியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 
பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்த இரண்டு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக கோரிப்பாளையம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

ttn

இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த மூதாட்டி யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற தகவல்கள் கிடைக்காததால், அது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.