சாலையில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீர் தீ! 

 

சாலையில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீர் தீ! 

சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்தில் திடீரென தீ பிடித்துள்ளது. 

சாலையில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீர் தீ! 

சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்தில் திடீரென தீ பிடித்துள்ளது. 

பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் எஞ்சினில் இருந்து புகை வந்ததால் ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார். தீப்பிடித்ததை அடுத்து பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றபட்டனர்.

சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். பேருந்தில் திடீரென தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.