சாலையில் கிடந்த பெட்டி ஆசையாக திறந்தவருக்கு நேர்ந்த விபரீதம்

 

சாலையில் கிடந்த பெட்டி ஆசையாக திறந்தவருக்கு நேர்ந்த விபரீதம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ராஜேந்திரா நகரைச் சேர்ந்தவர் அலி என்பவர். இவர் அந்த பகுதியில் நரசிம்மராவ் எக்ஸ்பிரஸ் மேம்பால சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, அந்த சாலையில் பிளாட்பாரத்தில் கண்ணை மயக்கும் அழகில் ஒரு மர்மப் பெட்டியைப் பார்த்துள்ளார். பெட்டியின் அழகில் மயங்கிய அலி, அந்தப் பெட்டியை எடுத்து திறந்து பார்க்க முயற்சி செய்துள்ளார். பெட்டியைத் திறப்பதற்கான முயற்சியில் அலி அழுத்தம் கொடுக்க, பயங்கர சப்தத்துடன் அந்தப் பெட்டி வெடித்து சிதறியுள்ளது. 

mystery box

பெட்டிக்கு மிக அருகில் இருந்து அதைத் திறந்துப் பார்க்க முயற்சித்ததில், வெடித்த வேகத்தில் தனது இரண்டு கைகளும் துண்டித்த நிலையில் ரத்த காயங்களுடன் சாலையில் மயங்கி விழுந்துள்ளார் அலி. வெடி சத்தத்தை கேட்டு அருகில் இருந்த மக்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அலி மயங்கி கிடந்ததை பார்த்த சிலர் அதன் பிறகு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மூலமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.