சாலையில் எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலம்: மானாமதுரையில் பரபரப்பு!

 

சாலையில் எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலம்: மானாமதுரையில் பரபரப்பு!

மானாமதுரை அருகே  இளம் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை: மானாமதுரை அருகே  இளம் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

murder

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வாகுடி விலக்கு பகுதியில்  35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக எரிந்து கிடந்துள்ளார். அப்போது  அந்த வழியாக வந்த காவலர் ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். 

burn

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானாமதுரை போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து வந்த  மருத்துவ அறிக்கையில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.  

crime

இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள போலீசார், அங்கிருந்த தடயங்களைச் சேகரித்ததோடு இளம்பெண்ணைக் கொன்றது யார்? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.