“சார்ஜ் போட்டுக் கொண்டே அப்பாவுடன் வீடியோ கால்” செல்போன் வெடித்து சிதறியதால் இளம்பெண்ணின் கண்கள் பாதிப்பு!

 

“சார்ஜ் போட்டுக் கொண்டே அப்பாவுடன் வீடியோ கால்” செல்போன் வெடித்து சிதறியதால் இளம்பெண்ணின் கண்கள் பாதிப்பு!

அவரது மகள் ஆர்த்தி, சுகுமாருடன் நேற்று வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்கள், சிலர் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதே போல, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார் என்பவரும் கொரோனாவால் வீடு திரும்ப முடியாமல் வெளிநாட்டிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. 

ttn

இந்நிலையில் அவரது மகள் ஆர்த்தி, சுகுமாருடன் நேற்று வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஆர்த்தி, போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசியிருக்கிறார். அதனால் ஹீட் ஆன செல்போன், ஆர்த்தி பேசிக் கொண்டிருக்கும் போதே பலத்த சத்ததுடன் வெடித்து சிதறியுள்ளது. செல்போனில் உடைந்த பாகங்கள் ஆர்த்தியின் கண்கள் மற்றும் காதுகளில் சென்றுள்ளன. 

 

இதனையடுத்து ஆர்த்தி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ஆர்த்தியின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.