சாய் பாபா கோயிலுக்கு ரூ. 8 லட்சத்தை நன்கொடையாக கொடுத்த பிச்சைக்காரர்!

 

சாய் பாபா கோயிலுக்கு ரூ. 8 லட்சத்தை  நன்கொடையாக  கொடுத்த பிச்சைக்காரர்!

இதையடுத்து முதுமை காரணமாக ஒரு கோயில் வாசலில் கடந்த 7 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வந்துள்ளார். 

சாய் பாபா கோயில் பணிக்காக பிச்சைக்காரர் ஒருவர் ரூ.8 லட்சத்தை  நன்கொடையாகக் கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ttn

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 71 வயதான யாதி ரெட்டி என்பவர் ரிக்சா இழுத்து அதில் வரும் பணத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.  இதையடுத்து முதுமை காரணமாக ஒரு கோயில் வாசலில் கடந்த 7 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வந்துள்ளார். 

ttn

இந்நிலையில்  சாய்பாபா கோவில் மற்றும் கோ சாலை மேம்பாட்டுக்காக யாதி ரெட்டி நன்கொடையாக ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளார்.முன்னதாக அவர் தான் பிச்சையெடுத்த பணத்தை வைத்து அந்த கோயிலுக்கு  இதுவரை  8 லட்சம் ரூபாய் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.