சாய் பல்லவியுடன் 2வது திருமணம்? முதல் முறையாக வாய் திறந்த விஜய்!

 

சாய் பல்லவியுடன் 2வது திருமணம்? முதல் முறையாக வாய் திறந்த விஜய்!

சாய் பல்லவியுடன் இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: சாய் பல்லவியுடன் இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். அதைத்தொடர்ந்து  தாண்டவம், தெய்வத்திருமகள், மதராசபட்டினம், வனமகன், சைவம், தேவி, தியா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கி வருகிறார். 

இவருக்கும் அமலாபாலுக்கும், ‘தலைவா’ படத்தில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். 

sai

அதையடுத்து படங்களில் மட்டும் தனது கவனத்தைச் செலுத்தி வந்த நிலையில் விஜய் தற்போது வளர்ந்து வரும் கதாநாயகியான சாய் பல்லவியைத் திருமணம் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. கரு  படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, மனம் ஒற்று போனதால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக வைரலாக பேசப்பட்டது.

sai pallavi

இது குறித்து இருவருடைய தரப்பும் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்த நிலையில்,இது வதந்தியா அல்லது உண்மையா என ரசிகர்கள் குழப்பத்திலிருந்தனர். இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த விஜய், ‘அது முற்றிலும் பொய்யானது. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை’ என்று பரவிவரும் வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.