சாய்பாபா உருவச்சிலையில் உருவான அதிசய வீபூதி ஊற்று!

 

சாய்பாபா உருவச்சிலையில் உருவான அதிசய வீபூதி ஊற்று!

சாய்பாபா சிலையில் இருந்து உற்றாய் பெருகிய வீபூதி அதிசயத்தில் ஆழ்ந்த பக்தர்கள்.

ஷீரடி சாய்பாபா அவர்கள் விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

saibaba

இந்நிலையில் இந்த ஆண்டு சாய்பாபாவின் 100 ஆவது சமாதி தினம் நேற்றைய தினம் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. 

இந்த பிரம்மாண்ட விழாவினை தமிழகம் முழுவதும் அமைந்துள்ள சாய்பாபா கோயில்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்திய சாய் சமாஜத்தின் குழுவினர் மேற்கொண்டு மிகவும் சிறப்பாக நடத்தி முடித்தனர்.

இந்நிலையில் சேலத்தில் உள்ள மேட்டு மாரியம்மன் கோயில் தெருவில் நீண்ட நாட்களாக வசித்துவரும் தொழிலதிபர் செந்தில் என்பவரின் வீட்டில், சீரடி சாய்பாபாவின் உருவச்சிலையில் இருந்து திருநீர் உற்பத்தி ஆகி கொட்டியது.

saibabagh

இந்த அறிய காட்சியை  கண்ட செந்தில் குடும்பத்தினர் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். நேற்றில் இருந்து இன்றுவரை இந்த அதிசய பாபா அவர்களை காண சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து வந்து அறிய பாபா அவர்களை தரிசனம் செய்து வருகின்றனர்.