சாம்பியன் பட்டம் பெற்ற சூர்யாவின் மகன்: மகிழ்ச்சியில் சிவக்குமார் குடும்பத்தினர்!
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் நடிகர் சூர்யாவின் மகன் தேவ் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை: தேசிய அளவிலான கராத்தே போட்டியில் நடிகர் சூர்யாவின் மகன் தேவ் வெற்றி பெற்றுள்ளார்.
நடிகர்கள் சூர்யா – ஜோதிகா ஜோடிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் இவர்கள் சினிமா பக்கம் இதுவரை தலைகாட்டியதே இல்லை.
தற்போது பள்ளிப்படிப்பைப் பயின்று வரும் தியா விளையாட்டில் சுட்டியாக உள்ளார். ஏற்கெனவே மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற தியா இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜிடமிருந்து கோப்பையை வாங்கியுள்ளார். அப்போது தியாவை பார்த்து ஜோதிகா ஆனந்த கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் தியா மட்டுமல்ல சூர்யாவின் மகன் தேவ்வும் தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்திலிருந்து 40 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தண்டர்கேக் பிரிவில் கலந்துகொண்ட தேவ் வென்றுள்ளார். இதனால் சிவக்குமார் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.