சாமியார் வீட்டில் 1 வருடம் இளம்பெண்ணை தங்க வைத்த பெற்றோர்: கடைசியில் அம்பலமான போலி சாமியாரின் லீலைகள்!?

 

சாமியார் வீட்டில் 1 வருடம் இளம்பெண்ணை தங்க வைத்த பெற்றோர்: கடைசியில் அம்பலமான போலி சாமியாரின் லீலைகள்!?

 ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து வலம்வந்த போலி சாமியார்,இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டிவனம் : ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து வலம்வந்த போலி சாமியார்,இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூரில் வசித்து வருபவர்  செல்வமணி. ஜடா முடி, நீண்ட தாடி என சாமியார் கெட்டப்பில் வலம் வந்து ஊர் மக்களை ஏமாற்றி வந்துள்ளார். மேலும் தான் பில்லி சூனியம் எடுப்பது போன்ற செய்வேன்  என்று கூறி மக்களை தன்  பக்கம் ஈர்த்துள்ளார். ,மேலும் ஆன்மிகம் சார்ந்து பல விஷயங்களைப் பேசியதால் மக்கள் இவரை நம்பியுள்ளனர். குறிப்பாக, பெண்களை வசியம் செய்து அவர்கள் கணவரை விட்டுப் பிரிந்து தன்னுடன் இருக்கும் படியான வேலைகளிலும் ஈடுபட்டு சில காலங்கள் அவர்களுடன் வாழ்ந்து விட்டு பின் வேறு பெண்ணை தேடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார் இந்த போலி சாமியார். அப்படி தற்போது திருமணமான ஹேமா என்ற பெண் இவருடன்  வாழ்ந்து வருகிறார்.

selvamni

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்திலிருந்து அழைப்பு வந்தது. அதில் தனது மகனின் வாழ்வில் பெரிய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது, அதை நீங்கள் வந்து சரி செய்து தரவேண்டும் என்று எதிர்முனையில் பேசியவர் தெரிவித்தார். இதனால் அங்கு சென்ற சாமியார் செல்வமணி, அவர் வீட்டில் 18 வயதில் பெண் இருப்பதைத் தெரிந்து கொண்டார். பின்பு மகனின் பிரச்னை நீங்க கோவில் கட்ட வேண்டும் என்றும் ஆனால்  அப்போது உங்கள் பெண் இங்கு இருக்கக் கூடாது, அதனால் நான் என் வீட்டில் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.  அவரின் பேச்சை கேட்டு தங்களது மகளைச் சாமியாரோடு அனுப்பி வைத்தனர்.  பலமாத காலம் அந்த பெண்ணுடன் வாழ்ந்த சாமியார் ஒருகட்டத்தில் அந்த பெண்ணை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அப்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்தனர். 

selvmanai

இதையடுத்து  அந்த பெண் வீட்டில் தனியாக இருப்பதைப்  பயன்படுத்திக் கொண்டு, ‘உன் அண்ணனை காப்பாற்ற நீ என்னுடன் வாழ வேண்டும்’ என்று கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அப்பெண் தந்தையிடம் நடந்ததைக் கூறி அழ, அவரது தந்தை திண்டிவனம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் சாமியார் செல்வமணி மற்றும் அவருடன் இருந்த ஹேமா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், செல்வமணி போலி சாமியார் என்பதும்  ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப்பிலையுடன் வலம் வந்துள்ளார். இவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் போலி சாமியார் செல்வமணியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.