சாப்பாடு போட்டி: நேருக்கு நேராக மோதிக்கொண்ட தர்ஷன்- சாண்டி 

 

சாப்பாடு போட்டி: நேருக்கு நேராக மோதிக்கொண்ட தர்ஷன்- சாண்டி 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் தொடங்கி 61 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இது வரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா, சரவணன், மதுமிதா, சாக்ஷி அகர்வால் மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் சாண்டி, தர்ஷன், கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் கிடந்த சீசன்னை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த சீசன் சற்று சுமாராகவே செல்கிறது. டாஸ்க் கொடுக்காததால் தான் இவர்கள் எப்போதும் காதல், புறம்பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது தான் உண்மையான டாஸ்க் ஆரம்பமாகவுள்ளது என்பதை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் இன்றைக்கான புரோமோ வெளியாகியுள்ளது. 

#Day61 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/uPkEoxOC3b
— Vijay Television (@vijaytelevision) August 23, 2019

அதில் சாண்டி மற்றும் தர்ஷனுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இருவருக்கும் இரண்டு தட்டு நிறைய லட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் யார் முதலில் முடிகிறார்களோ அவர்களே வெற்றியாளர் ஆவர். டாஸ்க் முடிவில் இரண்டு பெரும் சரிசமமாக முடிந்ததால் பிக் பாஸ் அடுத்த என்ன செய்வார் என்று இன்றைக்கான நிகழ்ச்சி பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.