சாதி மறுப்பு திருமணம்: கர்ப்பிணி பெண்ணை சரமாரியாக வெட்டிய தந்தை; மதுரையில் பரபரப்பு!

 

சாதி மறுப்பு திருமணம்: கர்ப்பிணி பெண்ணை சரமாரியாக வெட்டிய தந்தை; மதுரையில் பரபரப்பு!

வாலகுருவன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்  விசாரித்து வருகின்றனர்

சாதி மறுப்பு திருமணம்: கர்ப்பிணி பெண்ணை சரமாரியாக வெட்டிய தந்தை; மதுரையில் பரபரப்பு!

மதுரை : காதல் திருமணம் செய்த பெண்ணை அவரது தந்தையே கொல்ல  முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் நாகையா புரத்தைச் சேர்ந்தவர்  சுஸ்மா. இவர் வாழவந்தால்புரத்தைச் சேர்ந்த சிவசங்கரன் என்ற கல்லூரி மாணவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களின் எதிர்ப்பை  மீறி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். 

தற்போது சுஸ்மா 2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில்  டி.புதுப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பரிசோதனைக்காக வந்துள்ளார். இதையறிந்த அவரின் தந்தை வாலகுருவன், மகளை பாசத்துடன் பார்க்கச் செல்வது போல் சென்று அவருடன் பேச்சு கொடுத்துள்ளார். பிறகு மறைந்திருந்த அரிவாளால் சுஸ்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சுஸ்மாவின் தலை மற்றும் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சுஸ்மாவை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும்  வாலகுருவனை விரட்டிப் பிடித்த பொதுமக்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

arrested

இதை தொடர்ந்து வாலகுருவன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்  விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.