சாதி, மதமற்ற சான்றிதழ் பெற்ற பெண்ணுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
சாதி, மதமற்ற சான்றிதழ் பெற்ற பெண்ணுக்கு மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை: சாதி, மதமற்ற சான்றிதழ் பெற்ற பெண்ணுக்கு மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர் சினேகா. திருப்பத்தூரில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் இவர், இந்தியாவிலேயே முதன்முறையாக, சாதி, மதம் அற்றவர் என்று அரசு சான்றிதழைப் பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பல ஆண்டுகால போராட்டத்துக்கு பின்னர் அப்பெண் இந்த சான்றிதழை பெற்றதாக தெரிகிறது.
சினேகாவின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சினேகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே! pic.twitter.com/w1a22F2GRh
— Kamal Haasan (@ikamalhaasan) February 13, 2019
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே! என பதிவிட்டுள்ளார்.