சாதி ஆணவக்காரர்கள் வெறிபிடித்து ஆடி வருவது தொடர்கதையாக விட்டது: மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

 

சாதி ஆணவக்காரர்கள் வெறிபிடித்து ஆடி வருவது தொடர்கதையாக விட்டது: மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

சாதி ஆணவக்காரர்கள் வெறிபிடித்து ஆடி வருவது தொடர் நிகழ்வாகி வருகிறது என்று திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: சாதி ஆணவக்காரர்கள் வெறிபிடித்து ஆடி வருவது தொடர் நிகழ்வாகி வருகிறது என்று திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பதையும், பெண்ணின் தந்தை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்று வளர்த்துத் தாலாட்டி சீராட்டி வளர்த்த மகளை, தானே முன் நின்று கொலை செய்கிற கொடுமை நடக்கிறது என்றால், மனித உறவுகளைவிட, மனிதாபிமான உணர்வைவிட, பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா என்ற கேள்வி  எழுகிறது. சட்டத்தை மீறி, சாதி ஆணவத்துடன் பெற்ற மகளையும். அவரது கணவரையும் கொலை செய்வது மன்னிக்க முடியாத குற்றம். அண்மைக்காலமாக இத்தகைய கொடூரக் குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடப்பது பெரும் துன்பத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

ஆட்சியில் இருப்பவர்கள் இதன் மீது கவனம் செலுத்தாதது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் இத்தகைய சாதி வெறிக் கொலைகள் நடப்பதில்லை என்று பேட்டி கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. அதன் காரணமாக சாதி ஆணவக்காரர்கள் வெறிபிடித்து ஆடி வருவது தொடர் நிகழ்வாகி வருகிறது.

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது.சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் தி.மு.க. ஆதரிக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.