சாண்டியை விஜய் தொலைக்காட்சி காப்பாற்றுகிறது: நடிகை கஸ்தூரி காட்டம்! 

 

சாண்டியை விஜய் தொலைக்காட்சி காப்பாற்றுகிறது: நடிகை கஸ்தூரி காட்டம்! 

சாண்டியின் குணம் குறித்து நடிகை கஸ்தூரி  பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

சாண்டியை விஜய் தொலைக்காட்சி காப்பாற்றுகிறது: நடிகை கஸ்தூரி காட்டம்! 

சென்னை: சாண்டியின் குணம் குறித்து நடிகை கஸ்தூரி  பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைந்தவர் சாண்டி. எந்த நேரமும் அடுத்தவர்களைக் கேலி செய்வது, பாட்டு பாடுவது என்று வீட்டில் உள்ள அனைவரையும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்துள்ளார். ஆனால் இவர் மற்றவர்களுக்கு நடக்கும் சண்டையில் கலந்து கொள்வது இல்லை என்றும் கேமரா இருப்பதால் நடிக்கிறார் என்றும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த நிலையில் சாண்டி குறித்து கஸ்தூரி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‘சாண்டி விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்பதால் அவருடைய பாசிட்டிவ் பக்கத்தை மட்டுமே சேனல் ஒளிபரப்பி வருகிறது. அவருக்கு நகைச்சுவை, ஜோக்குகள், டான்ஸ் தவிர இன்னொரு பக்கம்வுள்ளது. அந்த பக்கம் வெளிப்படும் போது அவர் வில்லனாகப் பார்க்கப்படுவார். 

தொடர்ந்து பேசிய அவர், ‘பிக்பாஸ் வீட்டில் முகன், தர்ஷன் மட்டும் தான் இயல்பாக இருக்கிறார். விரைவில் சாண்டியின் கோபமான முகம் வெளியே வரும் என்றும்  கூறியுள்ளார்.