‘சாண்டியை பார்த்தாலே மதுமிதாவுக்கு வயிறு எரியுது’ : சாண்டியின் முன்னாள் மனைவி ஆவேசம்!

 

‘சாண்டியை  பார்த்தாலே மதுமிதாவுக்கு வயிறு எரியுது’ : சாண்டியின் முன்னாள் மனைவி ஆவேசம்!

காரித்துப்புவது  என்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. சாண்டியை தவிர்த்து யாரை துப்பியிருந்தாலும் எனக்கு கோபம் வரும். அவரை பார்த்து ஆம்பளையா என்று கேட்கிறார்.

‘சாண்டியை  பார்த்தாலே மதுமிதாவுக்கு வயிறு எரியுது’ : சாண்டியின் முன்னாள் மனைவி ஆவேசம்!

மதுமிதாவுக்கு சாண்டியை பார்த்து வயிறு எரிகிறது  என்று சாண்டியின்  முன்னாள் மனைவியும் நடிகையுமான  காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சென்ற வாரம்  லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக கிராம  வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் வகையில் பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என்ற இரு கிராமங்களாக ஹவுஸ்மேட்ஸ் பிரிக்கப்பட்டு ரகளையும், பஞ்சாயத்துமாகச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கீரிப்பட்டி தலைவி தலைவியான மதுமிதா பாத்ரூம் செல்ல அனுமதி கேட்டார். அப்போது  மதுமிதா முகத்தில் சாக்ஷி பேஸ்ட்டை  மீசை போல் போட்டுவிட  மாரியம்மா பாடலுக்கு நடனமாடும்படி சாண்டியும் , கவினும் டாஸ்க் கொடுத்தார்கள். மூவ்மெண்ட் கொஞ்சம் ஹெவியா போடும்படி சாண்டி கேட்க, கடுப்பான மதுமிதா சாண்டியிடம் எகிறினார்.  அடுத்தவங்க வலிய பாத்து சிரிக்கிறவன் ஆம்பளையா?  என சொல்லி காரி துப்பினார். அதற்கு சாண்டி  தேவையில்லாமல் வார்த்தையை விடாத என்று சொல்ல, ஹவுஸ்மேட்ஸ் அவரை சமாதானம் செய்தனர். இந்த விவகாரம் சமூகவலைதளத்தில்  அதிகம் பேசப்பட்டது.

இந்நிலையில் சாண்டியின்  முன்னாள் மனைவியும், நடிகையுமான காஜல் பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில்,மதுமிதா சாண்டியிடம்  அப்படி நடந்து கொண்டது தவறு. ஒருவரை அடித்துக் கூட விடலாம்.ஆனால்  காரித்துப்புவது  என்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. சாண்டியை தவிர்த்து யாரை துப்பியிருந்தாலும் எனக்கு கோபம் வரும். அவரை பார்த்து ஆம்பளையா என்று கேட்கிறார். வெளியில் கல்யாணம் செய்து குழந்தை பெற்றுள்ளார் அவரை எப்படி ஆம்பளையா? என்று கேட்பார். நாளைக்கு பிக் பாஸ் பீரியட்ஸ் டைம்ல டாஸ்க் கொடுத்தா, பிக் பாஸை  காரித்துப்புவாங்களா? அதை கமல் சார் கேட்காதது வருத்தமளிக்கிறது. கவினையோ, தர்ஷனையோ இப்படி பேசியிருந்தால் உன்னை சும்மா விட்டுருப்பாங்களா? சாண்டி  இளிச்சவாய், அதனால் வந்து ,மன்னிப்பு கேட்டான். ஆனால்  சாண்டியை பார்த்தாலே மதுமிதாவுக்கு வயிறு எரியுது. சாண்டிக்கு அவப்பெயரை வாங்கி தரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் மதுமிதா அப்படி நடந்து கொண்டார்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார். 

மேலும் தொடர்ந்து பேசியுள்ள அவர், இந்த வாரம் எலிமினேஷன் செய்யாமல்  சாக்ஷி ரகசிய அறையில் வைக்கப்படலாம். ஒருவேளை நான் வெளிப்படையாகக் கூறிவிட்டதால், அது நடக்காமல் கூட இருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.