‘சாண்டா’வாக மாறி குழந்தைகளுடன் நடனம் ஆடிய நாகினி சீரியல் நடிகை மௌனிராய்…வைரல் வீடியோ!

 

‘சாண்டா’வாக மாறி குழந்தைகளுடன் நடனம் ஆடிய நாகினி சீரியல் நடிகை மௌனிராய்…வைரல் வீடியோ!

நாடு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான ‘கிறிஸ்துமஸ்’ பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்களால் வெகுவாக கவரப்பட்ட சீரியலில் ஒன்று ‘நாகினி’. இதில் கதாநாயகியாக நடித்த மௌனிராய் தமிழ் மக்கள் மனதில் இடம் பெற்றார். தமிழக மக்கள் ‘நாகினி’ என்று தான் மௌனிராயை அடையாளம் கண்டு கொள்வர்.

ttn

அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மௌனிராய், தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். இவருக்கு எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் ஆனந்தமாக விளையாட வேண்டும் என்பது ஆசையாம். 

ttnn

நாடு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான ‘கிறிஸ்துமஸ்’ பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நன்னாளை அனைவரும் புத்தாடை உடுத்தி, பரிசுகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ttn

அதே போல. மௌனிராய் எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வசிக்கும் இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் பரிசுகள் வாங்கி கொடுத்து சாண்டாவாக மாறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், அந்த குழந்தைகளுடன் நடனம் ஆடி அவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். 

ttn

கிறிஸ்துமஸ் கேப் அணிந்து கொண்டு, குழந்தைகள் ஆடுவதைப் போலவே அவர் ஆனந்தமாக நடனம் ஆடும் வீடியோயும்,குழந்தைகளுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.