“சவ ஊர்வலத்தில் பூ தூவுவதில் சண்டை”…21 வயதான வாலிபர் குத்தி கொலை!

 

“சவ ஊர்வலத்தில் பூ தூவுவதில் சண்டை”…21 வயதான வாலிபர் குத்தி கொலை!

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சின்னகொக்கூர் கிராமத்தை  சேர்ந்தவர்  விஜயகுமார். இவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து  விஜயகுமாரின்  இறுதி ஊர்வலத்தில் பூ வீசுவதில் 21 வயதான  சரவணனுக்கும், ராமச்சந்திரன் என்பவருக்குத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால்  அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

ttn

இதைத்தொடர்ந்து  இரவு தூங்கிக்கொண்டிருந்த சரவணனையும் அவரது நண்பர் சதீஷையும் ராமச்சந்திரன் பிரச்னை தொடர்பாக பேச அழைத்துள்ளார். அப்போது அவருடன்  நண்பர்கள் செந்தில்குமார், மாதவன் ரஞ்சித் ஆகியோர்  உடனிருந்து உள்ளனர்.  இந்த பேச்சுவார்த்தை மீண்டும் சண்டையாக மாற ராமச்சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனை குத்தியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு   அருகிலிருந்த  மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக ராமச்சந்திரன், செந்தில்குமார், மாதவன், ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.