சல்லாபத்துக்கு பெண் கேட்டு விடுதி நிர்வாகியை மிரட்டும் முன்னாள் எம்.பியின் கணவர்!

 

சல்லாபத்துக்கு பெண் கேட்டு விடுதி நிர்வாகியை மிரட்டும் முன்னாள் எம்.பியின் கணவர்!

வாசுவின் சல்லாபத்துக்கு தனது மகளிர் விடுதியில் இருந்து பெண்களை அனுப்பவேண்டுமென வாசு தொலைபேசியில் மிரட்டி வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், புகார் ஏற்றுக்கொள்ளப்படுவதே இல்லை என காவலர்கள்மீது நிர்மலா குற்றம் சுமத்துகிறார்.

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தங்கும் விடுதி நடத்திவரும் நிர்மலா என்பவரிடம், திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்யபாமாவின் கணவர் வாசு சல்லாபத்துக்கு பெண் வேண்டும் என கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகி வைரலாகிவருகிறது. வாசுவின் சல்லாபத்துக்கு தனது மகளிர் விடுதியில் இருந்து பெண்களை அனுப்பவேண்டுமென வாசு தொலைபேசியில் மிரட்டி வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், புகார் ஏற்றுக்கொள்ளப்படுவதே இல்லை என காவலர்கள்மீது நிர்மலா குற்றம் சுமத்துகிறார்.

Ex MP Sathyabama, Vasu

தனக்கும் விடுதிக்கும் பாதுகாப்பு வேண்டுமெனவும் அவதூறாகப் பேசிய வாசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் நிர்மலா புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனாலும், நிர்மலாவின் புகாரை வாங்க மறுத்த காவல் துறையினர், பதிலுக்கு நிர்மலாவையே அவதூறாகப் பேசி அனுப்பியிருக்கின்றனர். எனவே, உயரதிகாரிகள் தலையிட்டு, தனது புகாரைப் பதிவு செய்து உரியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என நிர்மலா கோரிக்கை விடுத்துள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையெனில்  கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்கப்போவதாகவும் நிர்மலா மிரட்டல் விடுத்துள்ளார்.