சர்ஜிக்கல் ஸ்டிரைக் விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

சர்ஜிக்கல் ஸ்டிரைக் விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து விளக்கும் நிகழ்ச்சிகள் 32 நகரங்களில் நடத்தப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை: சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து விளக்கும் நிகழ்ச்சிகள் 32 நகரங்களில் நடத்தப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து விளக்கும் நிகழ்ச்சிகள் 32 நகரங்களில் நடத்தப்படும், தீவிரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தானின் தளங்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்படும். இதுவரை இல்லாத வகையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. 

தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது பாகிஸ்தான் அரசுதான் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இத்தகைய பயிற்சிகளை அளிக்க வேண்டாம் என பாகிஸ்தானை வலியுறுத்துகிறோம். தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கவே சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. போர் இல்லாத சூழலில் இந்திய வீரர்கள் அடித்து கொல்லப்பட்டனர். இதுபோன்ற சர்ஜிக்கல் தாக்குதல்கள் பலமுறை நடந்துள்ளது என்றார்.