சர்ச்சையில் சிக்கிய  2.0 படக்குழு! சம்பளமே கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார்…

 

சர்ச்சையில் சிக்கிய  2.0 படக்குழு! சம்பளமே கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார்…

திரைப்படத்துக்கு சப்-டைட்டில் கொடுத்ததற்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என மொழிக் கோர்வையாளர் ரேக்ஸ் தெரிவித்துள்ளார். 

சர்ச்சையில் சிக்கிய  2.0 படக்குழு! சம்பளமே கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார்…

திரைப்படத்துக்கு சப்-டைட்டில் கொடுத்ததற்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என மொழிக் கோர்வையாளர் ரேக்ஸ் தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி திரைக்கு வந்தப் படம் 2.0. மிகவும் பிரமாண்டமான தொழில்நுட்பங்களுடன் தயாரான இந்தப் படம் தமிழில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியானது. வசூல் ரீதியாகவும் சாதனைப் படைத்த 2.0 திரைப்படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்த நிலையில், தற்போது வரை அந்தப் படத்திற்கு சப் டைட்டில் உருவாக்கிக் கொடுத்த ரேக்ஸ் என்பவருக்கு சம்பளப் பணம் வழங்கப்படவில்லை என அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து, 2.0 படக்குழுவினரை பலமுறை தொடர்பு கொண்டும் பலனளிக்காத நிலையிலேயே இந்த தகவலை டிவிட்டரில் பதிவிடுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 

இதுதொடர்பாக 2. 0 படக்குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, பொதுவாக சப்டைட்டிலுக்கு 50 ஆயிரம் மட்டுமே சம்பளமாக நிர்ணயிக்கப்படுகிறது. அந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்ட ரேக்ஸ், அதன்பின் பெரிய  படம் என்பதால் 50 ஆயிரம் தனக்கு போதாது என வீண் விவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இந்தியாவில் ரேக்ஸ் அமைத்த சப் டைட்டில் அமேசான் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ரிஜக்ட் செய்யப்பட்டதாகவும்… ஒப்பந்த படி அவருக்கு வழங்கப்பட்ட தொகை வழங்கப்பட்டதாகவும், இத்தனை நாட்களுக்கு பின் உள்நோக்கத்துடன் படக்குழுவினர் மீது குற்றஞ்சாட்டுவதாக தகவல் கூறினர்