சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்ய பானம்

 

சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்ய பானம்

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கட்டாயமாக அருந்த வேண்டிய அருமையான ஒரு ஜூஸ். பிள்ளைகளுக்கு வாரம் ஒரு நாள் கொடுத்து பழக்கலாம்

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 100 கிராம்
மிளகு – 4
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – சிறிது
லெமன் ஜூஸ் – அரை தேக்கரண்டி

செய்முறை:

* பாகற்காயை கழுவி விட்டு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* நறுக்கின பாகற்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு மிளகு, சீரகம், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நுரை பொங்க அடிக்கவும்.

* நன்கு அரைத்த பாகற்காயை ஒரு கப்பில் வடிகட்டிக் கொள்ளவும்.

* பாகற்காய் ஜூஸில் மேலே எலுமிச்சை பழத்தை பிழிந்துக் குடிக்கவும். அவ்வளவாக கசப்பு தெரியாது.

* சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கட்டாயமாக அருந்த வேண்டிய அருமையான ஒரு ஜூஸ். பிள்ளைகளுக்கு வாரம் ஒரு நாள் கொடுத்து பழக்கலாம். அவர்களுக்கு கொஞ்சம் தேனும், லெமன் சாறும் கொஞ்சம் கூட சேர்த்து கொள்ளலாம்