சர்கார் பேனர் கிழித்த விவகாரம்: தற்கொலை செய்து கொண்ட இளைஞர்: உண்மை நிலவரம் என்ன?

 

சர்கார் பேனர் கிழித்த விவகாரம்: தற்கொலை செய்து கொண்ட இளைஞர்: உண்மை நிலவரம் என்ன?

சர்கார் பட பேனர் கிழித்தது தொடர்பான மோதலில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: சர்கார் பட பேனர் கிழித்தது தொடர்பான மோதலில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தனியார் பேனர் கடையில் பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர் தீபாவளியை கொண்டாட சொந்த ஊரான வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் அருகே  ஈராளச்சேரி கிராமத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் சர்கார் திரைப்பட நேற்று வெளியானதை அடுத்து அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சர்கார் திரைப்பட பேனரை குடிபோதையில் இருந்த மணிகண்டன்  கிழித்ததாக  கூறப்படுகிறது. 

banner

இதனையடுத்து மணிகண்டனின் வீட்டுக்குச் சென்ற சிலர் ரகளையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் உறவினர்கள் சிலர் மணிகண்டனை அவரது சித்தப்பா வீட்டிற்குள் தள்ளி வெளிப்பக்கமாக கதவைப் பூட்டினர்.
சிலமணி நேரம் கழித்து, உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மணிகண்டன் தூக்கில் பிணமாகத் தொங்கினார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி  அடைந்தனர்.

இந்நிலையில்  மணிகண்டனின் மரணத்தில்  சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.