சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம்

 

சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம்

சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை: சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்கார் படத்தின் சர்ச்சை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் அவருக்கு முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்தரையன் முன்பாக முறையீடு செய்தார். நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறும் அவர் முறையிட்டார்.

இதையடுத்து, இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்யுமாறும், நேரம் இருந்தால் மனுவை இறுதி வழக்காக விசாரணைக்கு எடுப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து, முருகதாஸுக்கு முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய நவம்பர் 27-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.