சர்கார் நாயகியை காண குவிந்த கூட்டம்: ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!
பிரபல நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த ’சர்கார்’ நாயகி கீர்த்தி சுரேஷை காண குவிந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
சென்னை: பிரபல நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த ’சர்கார்’ நாயகி கீர்த்தி சுரேஷை காண குவிந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கீர்த்தி சுரேஷ் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில், அடுத்ததாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் திருப்பத்தூரில் நகைக் கடை திறப்பு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். அப்போது அவரை காண அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணிநேராமாக 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Wow makkal Selvi fane??????
Vera level ??? #KeerthySuresh @varma1165 @GopikaKs @ItsKrishnaTanu @MersalNithya114 @Guna09Keerthy17 @Susi_keerthy @Keerthyofficia5 @Sathish_Keerthy @shivani_keerthy @WLKeerthyS @TrendsKeerthy pic.twitter.com/BDAaILMuty— ¥OGE$H KEERTHY ABI..♡♥♦ (@keerthyabi) October 28, 2018
மேலும், கீர்த்தி சுரேஷின் காரை ரசிகர்கள் சூழ்ந்துக் கொள்ள, அவரால் வெளியே வர முடியவில்லை. இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த தடியடியில் பலரும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.