சர்கார் சர்ச்சை எதிரோலி: விஜய் இல்லத்திற்கு முன் போலீசார் பாதுகாப்பு!

 

சர்கார் சர்ச்சை எதிரோலி: விஜய் இல்லத்திற்கு முன் போலீசார் பாதுகாப்பு!

நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை: நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது. இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இதில் வரலட்சுமியின் கதாபாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி. பெற்ற தந்தைக்கே விஷம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கோமலவள்ளியின் கதாப்பாத்திரம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் சர்கார் திரைப்படத்தில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர், தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் விஜய் வீட்டின் முன் பாதுகாப்பிற்காக குவிந்துள்ளனர்.