சர்கார் சர்ச்சை: அரிவாளோடு கொலை மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் கைது!

 

சர்கார் சர்ச்சை: அரிவாளோடு கொலை மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் கைது!

சர்கார் பட பேனர் கிழிப்பு விவகாரத்தில் அரிவாளோடு அதிமுகவினருக்குக் கொலை மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: சர்கார் பட பேனர் கிழிப்பு விவகாரத்தில் அரிவாளோடு அதிமுகவினருக்குக் கொலை மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கடும் சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. சர்கார் படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்ட இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.

sarkar

முன்னதாக சர்கார் சர்ச்சையினால்  இளைஞர்கள் இருவர் விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு அரிவாளுடன் அதிமுகவினருக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.இதையடுத்து அரிவாளோடு அதிமுகவினருக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களைக் கைது செய்ய தமிழக காவல்துறை தீவிரம் காட்டி வந்தது.

இந்நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த லிங்கதுரை, சஞ்சய் என்பதும், வீடியோவை வெளியிட்டவர் அனிஷேக் என்பதும் தெரியவந்தது. இதில், சஞ்சய் மற்றும் அனிஷேக் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.