சர்கார் ஆடியோ விழாவில் விஜய் பேசியதில் எந்தத் தப்பும் இல்லை : டி.ராஜேந்தர் ஆதரவு!

 

சர்கார் ஆடியோ விழாவில் விஜய் பேசியதில்  எந்தத் தப்பும் இல்லை : டி.ராஜேந்தர் ஆதரவு!

விஜய் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை, தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை: விஜய் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை, தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

vijay

இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் தனது 64வது பிறந்தநாளை முன்னிட்டு இலட்சிய திராவிட கழகத்தின் தீர்மானங்களையும், பொதுக் குழுவை கூட்டினார். இது குறித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டி.ராஜேந்தரிடம், சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தமிழக அரசியல் பற்றி பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, ‘ அவர் சொன்னது சரி. நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தலையும் பூவும் சேர்ந்தால்தான் நாணயம் செல்லும். தலைமை சரியில்லாத எந்த ஆட்சியும் செல்லாது. ஈபிஎஸ்- ஓபிஎஸ் எல்லாம் இன்று தனியாக நின்று தேர்தலில் ஜெயிக்க முடியுமா. எல்லாம் அம்மா வாங்கி வச்ச ஓட்டை வைத்துக் கொண்டு இவர்கள் ஏதேதோ செய்கிறார்கள். சினிமாக்காரர்களை விட ஈபிஎஸ், ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்குத் தான் சொத்துகள் அதிகம். வருமான வரி ரெய்டு வந்தாலும் அந்த பணம் எங்கே போகிறது எனத் தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

 

‘விஜய்க்கு இன்று தமிழகத்தில் மன்றங்கள் அதிகம். இதற்கு அடுத்து தமிழகத்தில் சிலம்பரசனுக்குத்தான் மன்றங்கள் அதிகம். உடனே சிம்புவுக்கு மன்றங்கள் இல்லைனு சொன்னா சொல்லிக்கோங்க. நாங்கள் ஆட்சிக்கு வருகிறோமோ இல்லையோ, ஆனால் நாங்கள் நினைக்கிறவர்கள்தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையை உருவாகும். டி ராஜேந்தருக்கு என தனி இடம் தாய்மார்களிடம் உள்ளது. எனவே அவர்களிடம் என்னால் ஓட்டு வாங்கிட முடியும்.தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாதென்று தான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன்.இனிமே நீங்கள் பார்க்க போகும் டி.ஆரே வேறு’ என்று தெரிவித்துள்ளார்.