சர்காருக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

 

சர்காருக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துக்கு இடைக்கால தடை ஏதும் விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துக்கு இடைக்கால தடை ஏதும் விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படத்தின் கதைக்கு உரிமை கோரி வருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார். சர்கார் படத்துக்கு தடை கோரி வருண் தாக்கல் செய்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து வரும் அக்.30ம் தேதிக்குள் பதிலளிக்க பட தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த படத்துக்கு இடைக்கால தடை ஏதும் பிறப்பிக்க முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவ.6ம் தேதி ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.